<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:blogChannel="http://backend.userland.com/blogChannelModule"> 
	<channel> 
		<title>Lankasri World RSS Feeds - Latest News</title>
		<link>http://world.lankasri.com/</link>
		<description>10 Latest news</description>
		<language>ta</language>
		<copyright>Copyright(c) 2005-13 Lankasri World</copyright>
		<pubDate>Tue, 21 May 2013 08:19:33 GMT</pubDate>
		<lastBuildDate>Tue, 21 May 2013 08:19:33 GMT</lastBuildDate>
		<webMaster>india@lankasri.com</webMaster>
		<image> 
			<title>Lankasri World</title>
			<url>http://world.lankasri.com/zpimages/rss_world.png</url>
			<link>http://world.lankasri.com/</link>
			<width>152</width>
			<height>54</height>
			<description>10 Latest news</description>
		</image>
		<item> 
	<title>அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Ol3023WAe2</link>		<description>அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா யூன் மாத இறுதியில் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;ஒபாமா அவரது மனைவி மிசெல்லுடன் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல், டான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுகிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதும், அமைதியை நிலைநாட்டுவதுமே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். &lt;/P&gt;
&lt;P&gt;மேலும் இந்த பயணத்தின் போது தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு ஏதிராக போராடிய 94 வயதான நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி ஒபாமா சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 08:17:55</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/obama_africa_go_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Ol3023WA42</link>		<description>இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;எல்லைப் புற துணைப்படையில் பணிபுரிந்த ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருடைய கணக்கில் பணம் இல்லை என்பதினால் வங்கி அதிகாரிகளிடம் அதிகப்பற்றில் (ஓவர்டிராப்ட்) பணம் கேட்டுள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;அதற்கு அவர்கள் மறுத்து விட்டதினால் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முயன்றுள்ளார். அங்கும் அவருக்கு பணம் வரவில்லை. &lt;/P&gt;
&lt;P&gt;இதனால் ஆத்திரமடைந்த அவர், வங்கியின் காவலாளியை முதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளார். அதன் பின்னர் வங்கியின் உள்ளே நுழைந்து அவர் கண்மூடித்தனமாக அங்கிருந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;இதனால் அவரை மற்றவர்கள் பிடிக்க முயற்சி செய்ததில் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த பெண் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்தார். &lt;/P&gt;
&lt;P&gt;சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பொலிசார் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். &lt;/P&gt;
&lt;P&gt;வங்கியில் பணம் கிடைக்காததால் ஒருவர் 4 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 07:53:36</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/bank_relief_money_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Ol3022WAU2</link>		<description>பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற முல்லக்ஸ் என்ற ஏல நிறுவனம் மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி, அவரது செருப்பு, சால்வை உள்ளிட்ட பொருட்களை இன்று ஏலத்திற்கு விடுக்கின்றது.</description>&lt;p&gt;&lt;P&gt;மேலும் மகாத்மா காந்தி எழுதி வைத்த உயிலின் நகல், பழைய செருப்பு, அவர் அணிந்திருந்த சால்வை, பதிவு செய்யப்பட்ட உரைகள், மைக்ரோஸ்கோப் ஸ்லைடில் உள்ள அவரது ஒரு சொட்டு ரத்தம் போன்ற பொருட்களையும் ஏலத்திற்கு விடப்போகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;காந்தியின் பொருட்களை அவரின் ஆதரவாளர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்தோணி சிட்டட்டுகாரா தான் ஏலத்தில் விட கொடுத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;சிட்டட்டுகாரா இந்த பொருட்களை சுமார் 20 ஆண்டுகளாக வங்கி லாக்கரில் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை சுபேதார் பி.பி. நம்பியார் என்பவர் எடுத்து அதை பத்திரமாக பல காலம் வைத்திருந்திருந்தார் என்று சிட்டட்டுகாரா தெரிவித்துள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;காந்தியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் முன்னர் பிர்லா ஹவுஸுக்கு வெளியே நின்ற பாதுகாவலர்களில் ஒருவர் தான் இந்த நம்பியார் என்று கூறப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;காந்தியின் ரத்தம் படிந்த மண்ணை பாதுகாக்க விரும்புபவருக்கு, அதை கொடுக்க தயாராக இருப்பதாக நம்பியார் கேரளாவில் உள்ள ஒரு ஊடகத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சிட்டட்டுகாரா, அவரிடம் இருந்த ரத்தக் கரை படிந்த மண்ணை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/gandhiji_auction_002.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/gandhiji_auction_003.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/gandhiji_auction_004.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 06:51:22</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/gandhiiji_auction_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Ol3022WAK2</link>		<description>ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.</description>&lt;p&gt;அந்நாட்டின் தீபகற்ப பகுதியான காம்சட்காவில் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணியளவில் இது ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;BR&gt;&lt;BR&gt;ரஷ்யாவின் பெட்ரோபவ்லோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. &lt;BR&gt;&lt;BR&gt;பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 04:56:05</pubDate>
	<imgURL>/photos/thumbs/earthquake_04.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Ol3022WAA2</link>		<description>நிலக்கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க நுகர்வதில் அபார திறமை கொண்ட தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கும், செர்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 1991ல் போர் நடந்த போது, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;மேலும் கண்ணிவெடியில் சிக்கி, 2,500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சண்டையின் போது, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களை பயன்படுத்த குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இதுகுறித்து தேனீக்களின் நடத்தைகளை பற்றி நன்கு அறிந்தவரும், தேனீக்களின் நிபுணருமான நிகோலா கிசெக் கூறுகையில், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்களுடன் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;தேனீக்கள், நறுமணத்தை முகர்வதில் அபாரத்திறமை கொண்டவை.&lt;/P&gt;
&lt;P&gt;எனவே அவற்றிற்கு கண்ணிவெடிகளின் மணம் குறித்து பயிற்சி அளிக்கும் போது, அவற்றால் கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.&lt;/P&gt;
&lt;P&gt;இது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் அல்ல. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்களுக்கு பயிற்சி அளிப்பதுதான், சற்று சவாலான காரியம் என்று தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 03:34:18</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/bee_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22YOl32bcg80C34edeMMa020BnB4dd3VBn5302oWAO2e4C0882cbclOAe2</link>		<description>அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;BR&gt;&amp;nbsp;&lt;BR&gt;திங்களன்று, மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் யுடாங் சூ(44), சிங் யாங்(31 ), யீ லீ (31) ஆகிய மூன்று சீன ஆராய்ச்சியாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. &lt;/P&gt;
&lt;P&gt;யுனைடட் இமேஜிங் ஹெல்த்கேர் என்ற சீன ஆராய்ச்சி நிறுவனம் அந்த நாட்டின் நிதி உதவி பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆராய்ச்சி குறிப்புகளை அவர்களுக்கு அளித்ததாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையும், வழக்கறிஞர்களும் வாதிட்டனர். &lt;/P&gt;
&lt;P&gt;தீவிர குற்றமான இதனை, அரசு ஒருபோதும் மன்னிக்காது என்று பிரீத் பராரா என்ற அரசாங்க வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.&lt;BR&gt;&lt;BR&gt;இதில், யுடான் சூ, சிங் யாங் ஆகிய இருவரும், ஞாயிறு அன்று நியுயார்க்கில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் கைது செய்யப்பட்டனர். யீ லீ பிரச்சினைகள் எழும்முன்னரே சீனாவிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.&lt;BR&gt;&lt;BR&gt;அமெரிக்காவின் வணிக ரகசியங்களை சீனா மறைமுகமாக அபகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 03:07:08</pubDate>
	<imgURL>/photos/thumbs/arrest_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe42OlT023WAS2</link>		<description>20 வினாடிகளில்&amp;nbsp;கையடக்க தொலைபேசிக்கு&amp;nbsp;சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார். 
&amp;nbsp;</description>&lt;p&gt;&lt;P&gt;இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் 18 வயதான ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனையைப் புரிந்துள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது. &lt;BR&gt;&lt;BR&gt;தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று&amp;nbsp;ஈஷா குறிப்பிட்டுள்ளார்&lt;/P&gt;
&lt;P&gt;சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார். &lt;/P&gt;
&lt;P&gt;இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 02:48:02</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/changer_001.JPG</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>69</imgHeight>
</item><item> 
	<title>200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe42OlT023WAI2</link>		<description>அமெரிக்க ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியை 200 மைல் வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது.</description>&lt;p&gt;&lt;P&gt;சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள் தீப்பிடித்து எரிந்தன.&lt;BR&gt;&lt;BR&gt;இந்த சூறாவளிக்கு பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாயினர். சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 120-க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;BR&gt;&lt;BR&gt;இவர்களில் 70 பேர் குழந்தைகளாவர். இவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களுக்கு உடனடியாக அவசரநிலை உதவிகள் வழங்க ஓக்லஹோமா கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 02:37:55</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/heavy_wind_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?224OllbbcC80044e2eMM3022nnB3dddBBnV300CWAAee4M088ccb2lOO22</link>		<description>ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன.</description>&lt;p&gt;ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப காலமாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டு வ்ருகின்றனர். &amp;nbsp;&lt;BR&gt;&lt;BR&gt;இந்நிலையில், இன்று பாக்தாத், ஷாப், பஸ்ரா, பலாட் ஆகிய இடங்களில் சன்னி, ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரு பிரிவு போர்க்குணம் கொண்டவர்கள் நடத்திய கார்குண்டு தாக்குதல்களில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர். &lt;BR&gt;&lt;BR&gt;கடந்த புதன்கிழமை முதல் ஈராக்கில் சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் என பல இடங்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 230 தாண்டியுள்ளது. இதனால் அங்கு உள்நாட்டு போர் தொடங்கி விட்டது என்று கூறப்படுகிறது. &lt;BR&gt;&lt;BR&gt;சிரியாவில் நடைபெற்று வரும் பிரிவினைவாத போரால் இங்கும் அது போன்று ஒரு நிலையை கொண்டு வர அல்கொய்தா ஆதரவுடன் செயல்படும் போர்க்குணம் கொண்டோரின் முயற்சிகள் தவிடுபொடியாக்கப்படும் என்று பிரதமர் நவுரி மாலிகி கூறியுள்ளார். &lt;BR&gt;&lt;BR&gt;கடந்த வெள்ளியன்று கடத்தப்பட்ட 8 போலீஸ்காரர்கள் துப்பாக்கியல் சுட்டுக் கொல்லப்பட்டு அன்பர் பகுதியில் இறந்து கிடந்தனர்.&lt;/p&gt;
	<pubDate>Mon, 20 May 2013 18:17:36</pubDate>
	<imgURL>/photos/thumbs/iraq_02.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?224Ollbbcs80044e2eMM3022nnB3dddBBnV300CWAAee4M088ccb2lOO22</link>		<description>வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரை சேர்ந்த ஒருவர், அங்குள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார்.</description>&lt;p&gt;அவருக்கு பரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.&lt;BR&gt;&lt;BR&gt;இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.&lt;BR&gt;&lt;BR&gt;சுகாதாரமற்ற உணவுகளை விற்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது வழக்கமான நடைமுறை தான். எனினும், இந்த அதிகாரி அபராதம் விதித்தது யாருக்கு என்பதுதான் இவ்விவகாரத்தின் சிறப்பம்சம்.&lt;BR&gt;&lt;BR&gt;ஜமால் அல் எனேசி-யின் தாயார் நடத்தி வந்த உணவகத்தில் தான் தரமற்ற உணவு விற்கப்பட்டது என்று தெரிந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த அவரை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார்.&lt;BR&gt;&lt;BR&gt;இது மட்டுமின்றி, இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் &quot;டுவிட்டரில்&quot; அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.&lt;BR&gt;&lt;BR&gt;நீதிக்குப் பின் பாசம்&quot; என்று கடமையாற்றும் இந்த வளைகுடா நாட்டு அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது.&lt;/p&gt;
	<pubDate>Mon, 20 May 2013 18:09:56</pubDate>
	<imgURL>/photos/thumbs/soudi_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item>
	</channel>
</rss>